மாவிலை

நுண்கதை

சூரபதுமனின் இறுதித்தலை ஒன்றுதான் பாக்கியுள்ளது. அதையும் பறிகொடுப்பதற்குக் கோவிலின் முன்பாக நட்டுவைத்திருந்த மாங்கொம்பின் பின்னால் மறைந்தான்.

முதலில் இருந்த கூட்டத்தைக் காட்டிலும், இப்பொழுது அதிகமாகவே உள்ளது. நடராசு தயாராக நின்றான். இந்த ஆண்டு எப்படியாவது ஒரு மாவிலையையாவது பறித்து விட வேண்டும் எனபதில் உறுதியாகயிருந்தான். அதை விட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகுமாம்; உடல்நலம் கிட்டுமாம்.

கந்தனின் அம்பிற்கு அரக்கன் மாண்டான். வழக்கம் போல் சண்டை ஆரம்பித்தது. கும்பலை விலக்கிக்கொண்டு வந்தவனின் சட்டையுடன் உதடும் கிழிந்திருந்தது. ஆனால் கையில் இலைகள் நிறைந்திருந்தன.

வீட்டிலிருந்த அவன் அப்பா அவர்கள் குடிசையின் பின்புறமிருந்த இரண்டு மாமரங்களையும் கவலையாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ஐப்பசி மழையில் பூப் பிடித்திருந்தது.

பட உதவி: ChatGPT