-
நான்முகி – கொற்றவைக் களப்பலி
2024 மார்ச் மாத ஆரம்பத்தில் ஐந்து தமிழக மாணவர்களால் விண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘யாழ்சாட்டை’ பின் தொடரும் மர்மம் என்ன? லைஃப் ஸ்டைல் பத்திரிகை ஒன்றின் நிருபராக இருந்த ஆர்த்தி ஏன் புலனாய்வு நிருபராக மாறவேண்டும்? வர்மா யார்? போட்டோக்ரபி அவன் தொழிலா? நம்பிக்கைக்கு உரியவனா? அபினவ், ஸ்டெல்லா காதலுடன் விதியின் விளையாட்டுதான் என்ன? கேள்விகளுக்கு விடையை காண “நான்முகி – கொற்றவைக் களப்பலி”. Amazon Link: https://amzn.to/2wFHpUv
-
குருதி தேடும் இயந்திரங்கள்
உயர் தொழில்நுட்பம் ஒன்று சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால் எப்படிப்பட்ட விளைவுகள் நேரலாம் என்பதை கூறுவதே இக்கதை. 2030 அக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை சில ஜந்துக்கள் தாக்குகின்றன. இந்திய உளவுப்பிரிவுகள் ஒன்றின் தலைவரான விக்ரம், அதைப் பற்றி ஆராய முற்படுகிறார். அந்த ஜந்துக்கள் அனைத்தும் ஏலியன்கள் என்ற மற்றவர் கோணத்திலிருந்து மாறுபட்டு அவர் அதை வேறு விதமாக அணுகுகிறார். அவை என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது? அவற்றை எப்படி அழிப்பது?